பெண்களைப் பார்த்து பெருமைப்படுவது ஆண்களின் குணம்...
தன்னைத்தானே பார்த்து பெருமைப்படுவது பெண்களின் குணம்...
கத்திகள் கொண்டு பழிதீர்ப்பது ஆண்களின் குணம்...
கண்களைக் கொண்டு பழி தீர்ப்பது பெண்களின் குணம்...
பெண்களை வைத்து சாதிப்பது ஆண்களின் குணம்...
பெண்மையை வைத்து சாதிப்பது பெண்களின் குணம்...
Sunday, February 27, 2011
Friday, July 3, 2009
ஆசைகள்
ஆசைகள் இல்லாதவர் யார்? எனக்கும் ஆசைகள் உண்டு! சன் டிவி! ஜெயா டிவி! பார்த்திட ஆசை.... குறிப்பாக குஷ்புவின் ஜாக்பாட் பார்த்திட ஆசை.... ஹை ஸ்பீட் இன்டர்னெட்டில் பிரவுஸ் பண்ணிட ஆசை.... எல்சிடி டிவியில் பார்த்திட ஆசை... உணர்வுகளை உள்ளம் கவர்ந்தவளிடம் பரிமாறிக்கொள்ள ஆசை.... கவலைகளை மறக்க ஆசை... இளம் பிராயத்துக்கு மாறிட ஆசை.... விமானத்தில் பறந்திட ஆசை... உறவினர்கள், பழைய நண்பர்களை பார்த்திட ஆசை.... பழைய திரைப்படங்களை மீண்டும் பார்த்திட ஆசை..... புதிய கார்களை ஒட்டிப்பார்த்திட ஆசை.... பிறருக்கு உதவிட ஆசை....' பிறர் எனக்கு உதவிட ஆசை.... கடன் வாங்காமல் இருக்க ஆசை.... பிறருக்கு கடன் இல்லாமல் வாழ ஆசை.... மறுபிறப்பென்பது உண்மையானால், அதே தாய்க்கு மகனாக பிறந்திட ஆசை... இவ்வளவு ஆசை படுவது பேராசையா! தெரியவில்லை............................. ஆனால் கொஞ்சம ஆசை.... கொஞ்சம் கனவு.... இவை இல்லாமல் ஒரு வாழ்க்கையா? அது தேவையா?
Sunday, June 21, 2009
பரதேசி
பொழைக்க வழி தெரியலயே பொறந்த நாட்டுல..... நாங்க பொழப்ப தேடி வந்தோமே கனடிய நாட்டுல..... உயர் பள்ளிக்கூடம் போக நாங்க கொடுத்து வைக்கல கண்டியில..... எங்க பெத்தவங்களுக்கும் படிப்பின் அருமை ஒன்னும் அப்போ தெரியல..... அப்பன் பட்ட கடனெல்லாம் எங்க தலையில..... எங்க அக்கா தங்கை கல்யாணம் எங்க முதுகில..... பிறந்த குழந்தை முகத்தை பார்க்கும் பாக்கியமும் கிடைக்கல..... அப்பா அம்மாவுக்கு அதுல அக்கறை இருக்கிறதாவும் தெரியல..... பண்டிகைகள், திருவிழாக்கள் ஒன்னும் தெரியல..... நாங்க பீர் குடிச்சி படுத்தாலும் தூக்கம் வரல..... ஊரோடும் உறவோடும் சேர்ந்து வாழ துடிக்குது- இந்த பரதேசி வாழ்க்கை முடியும் காலம் எப்போது....?
Friday, April 3, 2009
Thursday, April 2, 2009
Subscribe to:
Posts (Atom)